நான் விஜய்க்காக தான் கதை எழுதுவேன் - விஷால்



விஷால், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபகாலமாக விஷால், விஜய்க்கு போட்டியாக செயல்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

கத்தி படம் வெளியான நாளில் விஷால் தன்னுடைய பூஜை  படத்தை வெளியிட்டார். விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு புலி என்று பெயர் வைத்தார். அதற்கு போட்டியாக விஷால் தன்னுடைய படத்திற்கு பாயும் புலி என்று தலைப்பு வைத்தார்.

இதனால் விஷால், விஜய்க்கு எதிராக செயல்படுவதாக செய்திகளை பரப்பி வந்தனர்.

இது பற்றி விஷால் கூறியதாவது :

எந்த ஒரு புதுமுக இயக்குநரும் விஜய்க்காக தான் கதை எழுதுவார்கள். அந்த வகையில் புதுமுக இயக்குனராக நானும் விஜய்க்கு தான் கதை எழுதுவேன். அதோடு நான் விஜய் தீவிர ரசிகன் என்று கூறியுள்ளார்.

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose