கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. ஏன்? எதுக்கு?

கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் - Cineulagam
மும்பையில் வர்த்தக மற்றும் தொழில் இந்திய வர்த்தக கூட்டமைப்பு வருடாந்திர கூட்டம் அண்மையில் நடந்தது. அந்த கூட்டமைப்பில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, கமல் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு 2013-ல் பிரச்சினைகள் ஏற்பட்டு, ரிலீஸ் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
அப்போது கமலுக்கு ஆதரவாக நான் இருந்து இருக்க வேண்டும். வேறு பணிகளில் பிசியாக இருந்ததால் அதை தவறவிட்டு விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன், கமலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் திரைப்படங்களுக்கு தடை விதிப்பது சிரயான அணுகுமுறையல்ல, தணிக்கை குழு சான்றிதழ் பெற்ற பிறகும் தடை செய்ய கூடாது. தணிக்கை குழு அனுமதி பெற்ற படங்களை நிறுத்து வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
தணிக்கை குழுவினர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பட்டியலிட்டு அவற்றை திரைப்படங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். இதை நான் எதிர்க்கிறேன். சினிமாவிலும், பத்திரிகைகளிலும் வெளியாகும் எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose