மும்பையில் குடியேறவிருக்கிறார் தனுஷ்...

இந்தியில் ஒரு படம் ஹிட்டானதும், அங்கேயும் ஒரு வீடு பார்த்து விடுவது நமது ஹீரோயின்களின் பொதுவான வழக்கம். ஸ்ரீதேவி, அசின், என இதற்கு உதாரணம் நிறைய உள்ளன. பிறகு சில ஹீரோக்களும் இதே பாணியை பின்பற்றினர். பிரபு தேவா தொடர் பாலிவுட் வெற்றிப் படங்களை அடுத்து, ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். 

பின்னர் சொந்த வீட்டுக்கு குடியேறினார். தற்போது ’ராஞ்சனா’, ’ஷமிதாப்’ படங்களை தொடர்ந்து தனுஷுக்கு  நிறைய இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்பதற்காக ஒவ்வொரு முறையும் மும்பையில் சென்று ஒரு ஓட்டலில் தங்கி  கதை கேட்கவேண்டி இருக்கிறதாம்.


தற்போது ஒரு முடிவாக ’ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் தங்கி இருக்கும் பகுதியில் ஒரு வீடு இருப்பதாக கேள்விப்பட்டு  அதைப் பார்த்த தனுஷ் பிடித்துப்போகவே லீசுக்கு எடுக்க சம்மதம்  தெரிவித்திருக்கிறார். 

வேல்ராஜ், பிரபு சாலமன் இயக்கங்களில் இரு படங்களில் நடிக்கிறார் தனுஷ். இதில் வேல்ராஜ் பட ஷூட்டிங் தொடங்கி நடத்துக்கொண்டிருக்கிறது. பிரபு சாலமன் பட ஷூட்டிங் ஜூலை மாதம் துவங்குகிறது. அதன் பிறகு ஆனந்த் எல்.ராய்  இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த வருஷமும் அட மழையா பாஸ்!
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose