தனுசுடன் நடிக்க ஆசை: நடிகை ரேஷ்மி மேனன் பேட்டி

தனுசுடன் நடிக்க ஆசை: நடிகை ரேஷ்மி மேனன் பேட்டி

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகியான ரேஷ்மி மேனன் கோவைக்கு வருகை தந்தார். 

அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– 

நான் பிறந்தது கேரளா என்றாலும், பள்ளி படிப்பு சென்னையில் தான். அதனால் தான் தமிழ்நாடு எனக்கு சொந்த ஊர். பள்ளி படிப்பு முடிந்ததும் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் இனிது இனிது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

அதன்பின்னர் கல்லூரி படிப்புக்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் தேனீர் விடுதி படத்தில் நடித்தேன். தொடர்ந்து பர்மா பட வாய்ப்பும் கிடைத்தது. தற்போது உறுமீன், கிருமி, நட்பதிகாரம் ஆகிய 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை. 

சுஹாசினி, ரேவதி, ஜோதிகா மாதிரி நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். நல்ல கதை, நல்ல படங்களில் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன். தமிழில் தனுஷ் உடன் நடிக்க ஆசையாக உள்ளது.

ரஜினி சார் கூட ஒரு படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது நடித்து விட வேண்டும். எனக்கு என்றும் பிடித்த நடிகர் ரஜினி. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல நடிகை என்று பெயர் வாங்கியுள்ளேன் என்றார். 

பேட்டியின் போது கோவை பாபு, ஷாஜகான் ஆகியோர் உடனிருந்தனர்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose