ப்ரியாமணிக்கு வில்லனாகும் மிஷ்கின்


பிசாசு' படத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் அடுத்து தனது உதவியாளர் இயக்கிய 'கள்ளப்படம்' படத்தை தனது சொந்த பேனரில் சமீபத்தில் ரிலீஸ் செய்தார். இந்த படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது மிஷ்கின் மீண்டும் தனது சொந்த பேனரில் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
மிஷ்கினிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஜி.ஆர்.ஆதித்யா இயக்கவுள்ள இந்த படத்தில் இயக்குனர் ராம் ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்கவுள்ளார். மிஷ்கின் இந்த படத்தின் கதையை எழுதுவதோடு வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம், மற்றும் ப்ரியாமணி ஆகியோர் முதன்முதலாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாகவும், இது ஒரு த்ரில் மற்றும் ஆக்ஷன் கதையமைப்பை கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose