ஷூட்டிங்கிற்கு தனி விமானத்தில் செல்லும் ஹீரோயின்

 ஷூட்டிங்கிற்கு தனி விமானத்தில் செல்லும் ஹீரோயின்
கைநிறைய கால்ஷீட், டயரி நிறைய வெள்ளை பக்கங்கள் என்று பல ஹீரோயின்கள் புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். சில ஹீரோயின்கள் இனி தாக்குபிடிக்க முடியாது என்று முடிவு கட்டி திருமணத்துக்கு தயாராகிவிட்டார்கள். பாலிவுட்டில் கரீனாகபூர் தொடங்கி கேத்ரினா கைப் வரை இந்தநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கேப்பே இல்லாமல் கால்ஷீட் கொடுத்துவிட்டு எந்த ஷூட்டிங்கில் எப்படி கலந்துகொள்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.  புதியபடம், ஆட் பிலிம் மற்றும் பட புரமோஷனுக்கு கால்ஷீட் பிரித்துகொடுத்திருக்கும் அவர் ஓய்வில்லாமல் ஊர் ஊராக பறந்துகொண்டிருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘பஜிராவ் மஸ்தானி’ இந்தி படப்பிடிப்பில் மும்பையில் கலந்துகொண்டுவிட்டு அன்று இரவே ஐதராபாத்துக்கு பிளைட் ஏறி விடுகிறார். அடுத்த 4 மணி நேரத்தில் ஐதராபாத் வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இவரால் எப்படி இது சாத்தியமாகிறது என்றபோது இதற்காக ஜெட் விமானம் ஒன்றை தனிப்பட்ட முறையில் வாடகைக்கு எடுத்து அதை பயன்படுத்துகிறாராம்.


    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose