கடைசி 3 நாள் படப்பிடிப்பில் பாலா படம்
அதர்வா மற்றும் கயல்' ஆனந்தி நடித்து வரும் 'சண்டிவீரன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாளை கடைசிகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் மூன்றே மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
களவாணி, வாகை சூடவா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சற்குணம் இயக்கி வரும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் சொந்த நிறுவனமான 'பி ஸ்டுடியோஸ்' தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு அருணகிரி என்பவர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி இன்னும் சில நாட்களீல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மற்றும் தென்மாவட்டங்களில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் படப்பிடிப்பு முடிந்துபின்னர் முழுவீச்சில் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Labels:
atharva,
cinema,
cinema.tamil
- Blogger Comment
- Facebook Comment

0 comments:
Post a Comment