முதன்முதலாக சம்பளம் வாங்கி கொண்டு நடித்தேன். பேரரசு


புதுமுகங்கள் இர்பான், ரக்ஷிதா மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் 'ரு'. சதாசிவம் என்ற இயக்குனர் இயக்கிய இந்த படத்தை வீணா ஆனந்த் தயாரித்துள்ளார். ஸ்ரீநாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

'ரு' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் பேரரசு பேசும்போது 'சமீபத்தில் செய்தித்தாள்களில் நாம் பார்க்கும் திடுக்கிடும் செய்திகளான டெல்லி மாணவி கற்பழிப்பு, கன்னியாஸ்திரி கற்பழிப்பு போன்ற கொடூர செயல்களை செய்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்பது குறித்த படம் தான் 'ரு. மேலும் முதன்முதலாக இந்த படத்தில் சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். பேசிய சம்பளத்தை சரியாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். அதற்காக நன்றி தெரிவித்து கொள்வதுடன் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்' என்று கூறினார்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது, "தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு இயக்குனர் முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தால்தான் அடுத்த படம் குறித்து அவர் நினைத்து பார்க்க முடியும். இல்லாவிட்டால் அவரை எல்லோரும் மறந்து விடுவார்கள். இந்த ரு' படத்தின் இயக்குனர் சதாசிவம் தனது முதல் படமாக இதை இயக்கியுள்ளார். அவர் இந்த படத்தில் மட்டுமின்றி அடுத்த படத்திலும் வெற்றியடைய அனைத்து பத்திரிகை நண்பர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்' என்று பேசினார்.

இந்த படத்தின் இயக்குனர் சதாசிவம் பேசியபோது, 'கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கு மரணம் தண்டனை மட்டுமே போதாது. மரணத்தையும் தாண்டி ஒரு தண்டனை உள்ளது. அது என்ன என்பதை இந்த படத்தின் கிளைமாக்ஸில் கூறியுள்ளோம்' என்று கூறியுள்ளார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose