சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, பாபி சிம்ஹாவை தொடர்ந்து ஜீவா...

ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்குகிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது.
இரண்டு கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் ஒரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தற்போது சிவகார்த்திகேயனுடன்  ‘ரஜினி முருகன்’ படத்திலும், விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘இது என்ன மாயம்’ படத்திலும், பாபி சிம்ஹாவுடன்  ‘பாம்பு சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். ஜீவா, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose