அஜித் படத்துக்கு சிக்கல்? சுருதிஹாசனுக்கு புதிய படத்தில் ஒப்பந்தமாக நீதிமன்றம் தடை..

நாகர்ஜுனா, கார்த்தி நடிப்பில் பிக்சர் ஹவுஸ் மீடியா தயாரித்து வரும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தார் ஸ்ருதிஹாசன். அப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் தொடங்கிய பிறகு தற்போது இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதானல் தற்போது பிக்சர் ஹவுஸ் மீடியா ஸ்ருதிஹாசன் மீது ஒரு சிவில் மற்றும் க்ரிமினல் வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதுபற்றி பிவிபி கூறுகையில், நாகர்ஜுனா, கார்த்தி நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக கமிட்டாகி இருந்தார்.
அவரை தேர்வு செய்து அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து கால்ஷீட் வாங்கியிருந்தோம். அதோடு அவரிடம் உட்கார்ந்து அவரின் தேதிகளை பார்த்து அவரை கால்ஷீட் வாங்கி வைத்திருந்தோம். தற்போது ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்க முடியாது, தேதிகள் இல்லை என்று மின்னஞ்சல் மூலம் கூறியிருக்கிறார்.
எனவே தான் நாங்கள் ஸ்ருதிஹாசன் மீது வழக்கு தொடர்ந்தோம் என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிவிபி மீது எந்த தவரும் இல்லை என்பதை அறிந்து, ஸ்ருதிஹாசன் தற்காலிகமாக எந்த புதிய படமோ, விளம்பரத்திலோ ஒப்பந்தம் ஆகக்கூடாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose