தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி உள்பட பல படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் சென்னைக்கு சமீபத்தில் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் மனம் திறந்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
நான் சென்னையில் வந்து இறங்கியதுமே எனது குழந்தை பருவம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் மிகவும் மதிக்கும் கமல்ஹாசனின் வீட்டிற்கு என்னுடைய சிறுவயதில் சென்றுள்ளேன். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று கமல்ஹாசன் வெளியூரில் இருந்ததால் அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. அதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த எனக்கு அவர் கையெழுத்திட்ட புகைப்படம் மட்டுமே எனக்கு அன்றைய தினம் கிடைத்தது' என்று தனது மலரும் நினைவுகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
மேலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிக்க தயார் என்றும் ஏனெனில் இந்த இரண்டு மொழிகளுமே என்னுடைய தாய்மொழிகள் என்பதால் தென்னிந்திய மொழிகளில் நடிக்க நல்ல கேரக்டர் கிடைத்தால் தயார் என்றும் கூறினார்.
மேலும் சுசித்ரா சென் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பதாக வெளியாக தகவலில் உண்மையில்லை என்றும், அப்படி ஒரு படத்தில் நடிக்க நான் இதுவரை கமிட் ஆகவில்லை என்றும் பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.
0 comments:
Post a Comment