புலி படப்பிடிப்பில் ரோஜா: அதிர்ச்சியான விஜய்!

vijay, roja

விஜய்யின் இரட்டை வேடத்தில் பேண்டஸி படமாக உருவாகி புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் உள்ள தலைகோணத்தில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் ரோஜா கட்டிக்கொடுத்த லிங்கேஸ்வரன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதையறிந்த ரோஜா உடனே அந்த இடத்திற்கு சென்று விஜய்யை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
புலி படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்து வரும் ரோபோ ஷங்கரும் இந்த மாதம் ரிலீஸாகும் என்று கூறியது நினைவிருக்கலாம். அதனால் ரசிகர்கள் இப்படத்தில் விஜய்யின் ராஜா தோற்றத்தை காண மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose