விஜய் அவார்ட்ஸ்: சில சர்ச்சைகள்... ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி


விஜய் டிவி விருது விழா வழக்கம் போலவே கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆனந்தாயாழை மீட்டுகிறாள்... பாடலுக்கு விருது கொடுக்கவில்லை என்று இயக்குநர் ராம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த ஆண்டு இளையராஜா பாதியிலேயே கிளம்பியது... சிவகார்த்திக்கேயன் அடித்த சர்ச்சை கமென்ட், அமலாபாலுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருந்து சிறப்பிப்பார். ஆனால், துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது (வாயை மூடி பேசவும்) கொடுத்து முடித்தவுடன், எங்கு சென்றார் என்று தெரியவில்லை. நிகழ்ச்சி முடியும்வரை அவரை காண முடியவில்லை. Read more
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose