அந்த ஆள் கூட நான் நடிக்க மாட்டேன்: கோபத்தில் கொந்தளித்த ஹீரோ

டைம் நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என சித்து நடிகர் கறாராக தெரிவித்துள்ளாராம். டைம் நடிகரும், சித்து நடிகரும் சேர்ந்து நடித்த மதுரையில் பிரபலமான இனிப்பு வகையின் பெயர் கொண்ட படம் நன்றாக ஓடியது. 

அந்த படத்தில் சித்துவை விட டைம் நடிகரை பற்றி தான் பலரும் பாராட்டி பேசினார்களாம். இதை அறிந்த சித்து கடுப்பாகிவிட்டாராம். இருப்பினும் அந்த கடுப்பை யாரிடமும் காட்டாமல் அமைதியாக இருந்துள்ளார். 

இந்நிலையில் இயக்குனர் ஒருவர் சித்துவை அணுகி கதை ஒன்றை சொல்லியுள்ளார். அதுவும் இரண்டு ஹீரோ கதையை சொல்லியுள்ளார். ஒரு ஹீரோ நீங்க சார், மற்றொரு ஹீரோ டைம் நடிகர் என்று இயக்குனர் சித்துவிடம் தெரிவித்துள்ளார். 

டைம் நடிகரின் பெயரை கேட்டதும் சித்துவுக்கு கோபம் வந்துவிட்டதாம். அந்த ஆள் நடிப்பதாக இருந்தால் உங்கள் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டாராம். இதை பார்த்த இயக்குனர் சரி, சரி கோபப்படாதீர்கள். நான் வேறு ஒருவரை இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என்று தெரிவித்து சித்துவை சமாதானம் செய்தாராம்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose